மருதமலை முருகன் சிலை அமைக்க அனுமதி மறுப்பு!

கோவை: மருதமலை 184 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி மறுத்துள்ளது.

Advertisement

கோவையின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றான மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.110 கோடியில் 184 அடி உயரத்திற்கு முருகன் சிலையை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 137 மீட்டர் தொலைவுக்குள் உள்ளதால், அங்கு சிலை அமைப்பது வன விலங்குகளுக்கு இடையூறாக இருக்கும் என்று சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

Advertisement

அதில், சிலை அமைக்கும் இடம் வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதால் அங்கு 184 அடி உயர சிலையை அமைக்க அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், முருகன் சிலையை வேறு இடத்தில் அமைப்பதற்கான யோசனையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.