கோவை: கோவையில் மின்வாரிய கேங்மேன் பணியாளர்கள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களாக பணியாற்றி வருபவர்கள் முத்தரப்பு ஒப்பந்தப்படி கலர் உதவியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும் இந்த பணியாளர்களின் வேலைப்பளு இல்லாத இடங்களில் சட்டவிரோதமாக பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகம் அருகில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி கேங்மேன் பணியாளர்களை களஉதவியாளர்களாக மாற்ற வேண்டும், விருப்ப ஊர் மாறுதல் பெற்ற அனைத்து பணியாளர்களையும் பணிவிடுப்பு செய்திட வேண்டும், கேங்மேன் படியாளர்களின் உழைப்பை அங்கீகரித்து இதனை நிறைவேற்ற வேண்டும்
வேலைப்பளு இல்லாத இடங்களில் சட்டவிரோதமாக பயன்படுத்தக் கூடாது கேங்மேன் பணியாளர்களை அடிமைகள் போல் நடத்தக்கூடாது இதர பணிகளையும் அவர்கள் மீது திணிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் தெற்கு வடக்கு நீலகிரி திருப்பூர் பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை கிளைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Coimbatore Tree Cutting Fine: Rs 2.10 Lakh Penalty for Illegal Tree Cutting
கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.





