கோவையில் மங்கி குல்லா கொள்ளையன்- சிசிடிவி காட்சிகள் வெளியானது

கோவை: கோவையில் டிப் டாப் உடையுடன், மங்கி குல்லா அணிந்த வரும் கொள்ளையன் வீடுகளில் நோட்டமிட்டு பணம், நகை திருட்டிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது

கோவையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டவுசர் கொள்ளையர்கள் மாநகரில் பல்வேறு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தனித், தனியான வீடுகளில் நோட்டமிட்டு உள்ளே புகுந்து கொள்ளை அடித்து சென்றனர்.

மேலும் டவுசர் கொள்ளையர்கள், முகத்தை மறைத்துக் கொண்டு, இரவில் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி கோவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Advertisement

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் வடமாநில டவுசர் கொள்ளையர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள சாமுவேல் என்பவரின் வீட்டில் 10 பவுன் நகை 34,000 ரூபாய் ரொக்க பணம் உட்பட அப்பகுதியில் உள்ள ஐந்து வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

Advertisement

பின்னர் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளை நடந்த வீடுகளுக்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதைப் பார்த்த போது, டிப் டாப்பாக உடையில், மங்கி குல்லா அணிந்து கொண்டு ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் டிப் டாப் ஆசாமி ஈடுபட்டது தெரியவந்தது.

தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

மேலும் காவல் துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மங்கி குல்லா அணிந்த டிப் டாப் கொள்ளையனை உடனடியாக பிடித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.