பராசக்தி தீ பரவுமா?- நயினார் நாகேந்திரன் அசர வைத்த பதில்…

கோவை: பராசக்தி தீ பரவுமா என்ற கேள்விக்கு தீ வைத்தால் பிலீம் எரிந்து விடும் என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபீன் இரண்டு தினங்கள் கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும், 125 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களை நேரில் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து சென்றுள்ளார் என்றார்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மதமாற்றம் செய்யப்படுவது தொடர்பான கேள்விக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, ஊட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் மதம் மாற்றம் நடைபெறுவதாகவும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறக்கூடாது என்பதே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு அவரவர்களின் மதம் அவர்களுக்கு பெரிது என தெரிவித்தார்.

Advertisement

பராசக்தி தீ பரவுமா என்ற கேள்விக்கு தீ வைத்தால் பிலீம் எரிந்து விடும் என பதிலளித்தார்.

இரண்டு தினங்களில் தொகுதி பங்கீடு குறித்து ஏதாவது பேசப்பட்டதா? என்ற கேள்வி, அது தொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அரசியல் பேசவில்லை என்றும், தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் இப்போது அது குறித்து பேசப்படவில்லை என்று கூறி சென்றார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...