NCC செய்தி எதிரொலி: சுத்தமானது இருகூர் குப்பைக்கூளம்! – Video உள்ளே!

கோவை: NCC செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் இருகூரில் தேங்கிக்கிடந்த குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டன.

Advertisement

இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.ஜி போஸ் நகர் எக்ஸ்டென்ஷனில் பல நாட்களாக சாலை ஓரம் குப்பைகள் தேங்கிக்கிடந்தன.

இதன் அருகில் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் குப்பைகள் சாலையெங்கும் பரவியதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், மாணவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இது குறித்து News Clouds Coimbatore வாசகர் பிரபு வாசுதேவன் நமக்கு வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் தகவல் அளித்தார்.

Advertisement

தகவலின் அடிப்படையில், “இது இருகூரா? இல்லை குப்பைத் தொட்டியா?” என்ற தலைப்பில் News Clouds Coimbatore செய்தி வெளியிட்டது.

மேலும், இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் பவன் குமாரிடமும் கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே அங்கு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன், தூய்மை பணியாளர்கள் குழு களமிறங்கி சில மணி நேரங்களில் அந்த இடத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்தினர்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். இணைய இங்கே சொடுக்கவும் 👈

இதனால் தற்போது அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியர் பவன் குமாருக்கு நன்றி மற்றும் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.