தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் நடைபெற்ற பாரா டேபிள் டென்னிஸ்…

கோவை: தமிழ்நாட்டில் முதல்முறையாக பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோயம்புத்தூரில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்றது.

Advertisement

கங்கா மருத்துவமனையின் ஒரு பிரிவான கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையம், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம், கோயம்புத்தூர் பாரா டேபிள் டென்னிஸ் குழு, தமிழ்நாடு பாரா டேபிள் டென்னிஸ் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாட்டின் முதல் மாநில அளவிலான பாரா டேபிள் டென்னிஸ் தரநிலை சாம்பியன்ஷிப் போட்டி 2025 கோயம்புத்தூரில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடத்தியது.

இந்த முக்கியமான நிகழ்வில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பாரா விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும், காயத்தின் வகை அடிப்படையில் வகுப்பு 1 முதல் 10 வரை போட்டியிட்டனர்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை லீக் போட்டிகள், நாக் அவுட் போட்டிகள், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் என பல்வேறு சுற்றுகள் நடத்தப்பட்டன.

Advertisement

பின்னர் மாலை 5 மணி அளவில் நடந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் . A. சரவண சுந்தர் .பங்கேற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி விளையாட்டாளர்களின் உறுதி மற்றும் ஊக்கத்தை பாராட்டும் உரையை நிகழ்த்தினார்.

நாள் முழுவதும் பரபரப்பாக நடந்த போட்டிகளில் கடும் போட்டி தன்மை, உற்சாகமான செயல்பாடுகள், மற்றும் சிறந்த விளையாட்டு மனப்பான்மை வெளிப்பட்டது.
கங்கா மருத்துவமனை தலைவர் மற்றும் கங்கா ஸ்பைன் இஞ்சூரி பவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ் .ராஜசேகரன் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள் மற்றும் மறுவாழ்வை ஊக்குவிப்பதில் கங்காவின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சுந்தராபுரம், கிணத்துக்கடவு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்…

கோவை: கோவை சுந்தராபுரம் கிணத்துக்கடவு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார் கோவை மாவட்ட ஆட்சியர். கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...