கோவை: ஓய்வூதியர்களின் மனுக்கள் குறித்து நடவடிக்கைக எடுத்து இறுதி அறிக்கை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோயமுத்தூர் மாவட்டத்தில், நடைபெற்ற ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய குறைகளைவுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய குறைகளைவுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஓய்வு ஊதியதாரர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சுஜாதா, துணை ஆணையர் (கலால்) சாதனைக்குறள், ஓய்வுப்பெற்ற பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கோயமுத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்களின் குறைகளைவுக் கூட்டத்தில் ஓய்வூதிய பயன்கள்புதிய மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவ செலவின தொகை திருப்பி செலுத்துதல் என மொத்தம் 67 மனுக்கள் கடந்த ஒரு மாதமாக பெறப்பட்டுள்ளது. அவை சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
மேலும் பெறப்பட்டுள்ள ஓய்வூதிய பலன்கள். மருத்துவ செலவின தொகை, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவை கோரி விண்ணப்பித்த ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நேர்வில் இடைக்கால அறிக்கை பெறப்பட்ட மனுக்களுக்கு துறைச்சார்ந்த அலுவலர்கள் முறையாக தீர்வு கண்டு மனுதாரருக்கு தகவல் தெரிவித்து இறுதி அறிக்கை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.





