பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கோவைக்கு எந்த இடம்? எவ்வளவு தேர்ச்சி? – முழு விவரம்!

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் கோவையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 97.48% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை 7,92,494 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில், மாணவிகள் 4,19,316, மாணவர்கள் 3,83,128 பேர்.

தேர்வு எழுதியவர்களில் 7,53,142 பேர், அதாவது 95.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,05,472 (96.7%), மாணவர்கள் 3,47,670 (93.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போலவே இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement

கடந்த கல்வியாண்டை விட இந்தாண்டு தமிழகத்தில் 0.47% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அரியலூர் 98.82% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 97.98% இரண்டாமிடமும், திருப்பூர் 97.53% மூன்றாமிடமும், கோவை 97.48% தேர்ச்சியுடன் 4ம் இடமும் பிடித்துள்ளது. அடுத்ததாக குமரி 97.01% தேர்ச்சியுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 180 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

கோவையில் மாணவர்கள் 16,135 பேர், மாணவிகள் 18,902 பேர் என மொத்தம் 35,037 பேர் தேர்வு எழுதினர். இதில், 15,579 மாணவர்களும். 18,576 மாணவிகளும் என மொத்தம் 34,155 பேர் தேர்ச்சியடைந்துள்ளன்ர. மாணவர்களில் 96.55% பேரும், மாணவிகளில் 98.28% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 1.73 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவையில் தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 97.48% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...