கோவையில் பொங்கல் பானைகள் தயாரிப்பு விறுவிறு… புகைப்படங்கள் & வீடியோ

கோவை: பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் மண்பாண்டங்கள் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையைக் கொண்டாட தமிழ்நாடு மெல்ல மெல்லத் தயாராகி வருகிறது.

Pongal clay pot making in Coimbatore

இதனிடையே, கோவை கவுண்டம்பாளையம் அருகே பொங்கல் பானைகள் தயாரிப்புப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு தயாராகும் மண்பாண்டங்கள் கோவை மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளுக்கும் திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement
Pongal clay pot making in Coimbatore

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் மாரிமுத்து கூறுகையில்,

"கால் அடி முதல் 3 அல்லது 5 அடி வரை கூட மண்பாண்டங்கள் தயாரித்து வருகிறோம். இன்று பானை செய்தால், நாளை அதனை தட்டி தயார் படுத்துவோம். இன்று தயாரிக்கும் பானையை நாளை காய வைப்போம். அதனைத் தொடர்ந்து 100 அல்லது 150 பானைகள் சேர்ந்தவுடன் அவற்றை ஒன்றாகச் சுட வைப்போம்

எங்களுக்கு மண் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் பானை செய்வதிலும் எங்கள் வாழ்வாதாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.” என்றார்.

Advertisement
Pongal clay pot making in Coimbatore

விற்பனையாளர் கிருஷ்ணவேணி கூறுகையில்,

கவுண்டம்பாளையத்தில் நாங்கள் 5 தலைமுறைகளாக பானை செய்து விற்பனை செய்து வருகிறோம். பொங்கலுக்காக தற்போது பானைகள் தயாராக உள்ளன. எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய தகுந்த இட வசதி எங்களுக்கு இல்லை. அதனை ஏற்படுத்தித் தர வேண்டும்." என்றார்.
Pongal clay pot making in Coimbatore

இந்த பொங்கல் பானைகள் ரூ.150 முதல் அளவுக்கு ஏற்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Pongal clay pot making in Coimbatore
Pongal clay pot making in Coimbatore

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...