நாய்கள் குரைத்ததால் வெளியே வந்த நபருக்கு அதிர்ச்சி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: நாய்கள் குரைத்ததால் வெளியில் வந்தவரை நெருங்கி வந்த காட்டு யானை, நூலிழையில் தப்பிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது.

அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் ரேஷன் கடைகளிலும் வைக்கப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை தின்று செல்கிறது.

வனத்துறையினரும் காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் ரோந்து பணிகளை மேற்கொண்டாலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

Advertisement

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பன்னிமடை அடுத்த திப்பனூர் ஊருக்குள் தெருக்களில் உலாவி வந்துள்ளது. அப்பொழுது நாய்கள் குரைத்ததால் முத்து என்பவர் வீட்டிலிருந்து வெளியே வந்து அவரது கேட்டின் சிறிய கண்ணாடி துளை வழியே பார்த்துள்ளார் அப்பொழுது யானை தும்பிக்கையை நீட்டிய வண்ணம் நெருங்கி வந்துள்ளது.

யானை நெருங்கி வருவதை பார்த்து அச்சம் அடைந்த அவர் கேட்டை தட்டி சத்தம் எழுப்பியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த ஒற்றை காட்டுயானை அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளது. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

அடிக்கடி காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதால் இரவு நேரங்களில் வெளியில் வருவதற்கு அச்சமாக இருப்பதாகவும் எனவே யானைகள் காட்டு விலங்குகள் ஆகியவை ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...