ரயில் நிலையத்தில் இந்தி மொழியை நீக்க வேண்டும்- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கோவையில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தி மொழியில் ஊரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை கண்டிக்கும் விதமாகவும் அதனை அழிக்க வலியுறுத்தியும் மே பதினேழு இயக்கம் சார்பில் கோவை ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மதிமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழி ஆதரவாகவும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகவும் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீதும் இந்தி மொழியை திணித்து வரக்கூடிய சூழலில் சமீப காலங்களாக ரயில் நிலையங்களில் இந்தி மொழியை முதன்மையாக்கி வைத்துள்ளார்கள் என தெரிவித்தார்.

Advertisement

மோடியும் அமித்ஷாவும் எதை எதையோ பேசி இந்தியை முதன்மையாக்க வேண்டும் என்றும் ஆங்கில மொழியை அகற்ற வேண்டும் என்றும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் இது இருமொழிக் கொள்கை உள்ள மாநிலங்களின் மீது பாஜக அரசு தொடுத்துள்ள போர் என தெரிவித்தார்.

மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்வில் பெரியாரின் புகைப்படம் இடம்பெற்று பின்னர் அகற்றப்பட்டது குறித்தான கேள்விக்கு, மோடி நடத்தும் நிகழ்வில் பெரியார் படம் இல்லாமல் இருப்பதே சிறப்பு அதனை வரவேற்கிறோம், அதே சமயம் அது அதிமுக நிகழ்வாக இருந்து பெரியார் படம் நீக்கப்பட்டு இருந்தால் கண்டித்து இருப்போம், ஆனால் பாஜக நடத்தும் நிகழ்வில் பெரியார் படம் வைத்து அவர்கள் பெரியாரை ஏற்றுக் கொண்டார்கள் என்று நடித்தால் அது தமிழ்நாட்டிற்கு ஆபத்து என பதிலளித்தார்.

Advertisement

தொடர்ந்து பேட்டி அளித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் மொழியை உலகெங்கிலும் கொண்டு செல்கிறேன் என்று பிரதமர் மோடியின் நாடகம் நடத்தி வருவதாகவும் ரயில் நிலையங்களில் தமிழ் மொழியில் உள்ள அறிவிப்புகளை எல்லாம் இந்தி மொழியாக மாற்றி உள்ளார்கள் என தெரிவித்தார்.

இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம் பெரியார் காலத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அது தற்பொழுதும் தொடர்வதாக தெரிவித்தார். உடனடியாக இந்தி மொழி அகற்றப்பட வேண்டும் எனவும் இல்லை என்றால் இனிவரும் நாட்களில் பொதுமக்களே இந்தி மொழியை அழிப்பார்கள் என தெரிவித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

2 COMMENTS

Comments are closed.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...