பி.எஸ்.ஜி மருத்துவமனையில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை!

கோவை: கோவை PSG மருத்துவமனையில் மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கால் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்…

கோவை பி எஸ் ஜி மருத்துவமனையில் முதுகலை மயக்கவியல் மருத்துவ மாணவி பவபூரணி கடந்த 6ம் தேதி மருத்துவமனை கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்த மாணவி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இது சம்பந்தமாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்தது. அதன்படி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Advertisement

இந்நிலையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொன்தோஷ் ஆகியோர் இன்று மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனை நிர்வாகிகள், சம்பவம் நடந்த போது இருந்த மருத்துவர்கள், இதர மாணவிகள் கோவை அரசு மருத்துவமனை முதல்வர், மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பெற்றோர் உறவினர்களிடமும் அவர்களது கோரிக்கைகள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

Advertisement

விசாரணையில் கிடைக்கபெற்ற கருத்துக்களை அறிக்கையாக நீதி அரசரிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.