துணை ஜனாதிபதி ஆகிறார் கோவை மண்ணின் மைந்தர்!

கோவை: கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 1957ல் அப்போதைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்குள் இருந்த தாராபுரத்தில் பிறந்தார்.

பட்டதாரியான இவர், சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கத்தில் பணியாற்றி வந்தார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு கடந்த 1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக அரசியலில், பாஜக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் முக்கிய பங்காற்றி வந்தார்.

Advertisement

இவரது திறமையைப் பார்த்த பாஜக மேலிடம் கடந்த 2016ம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணனை மத்திய கயிறு வாரிய தலைவராக நியமித்தது. பின்னர், கடந்த 2023ம் ஆண்டு இவரை ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் நியமித்தது.

கடந்த 2024ல் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, அதே ஆண்டில் ஜூலை மாதம் மஹாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Advertisement

இப்படி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்த சி.பி.ராதாகிருஷ்ணனை இந்தியாவின் துணை ஜனாதிபதியாக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது மேற்கு மாவட்ட மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இதனிடையே, “துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை தேர்வு செய்து நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி” என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியாக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தற்போது வயது 68.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத்...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...