கோவை: மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம்மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பில்லூர் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு மீன்பிடி குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் ஆணையர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அவர்களால் வரவேற்கப்படுகின்றன.
ஒப்படைப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் பார்வையிடவும். இந்த இணைய வழி ஏலத்தில் கலந்து கொள்ள விரும்ப்பமுள்ளவர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை [19494/F3/2024] [2026_AHDF_684190 1] என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையவழி ஏலத்தில் ஒப்படைப்புள்ளி ஜூலை 21-ம் தேதி அன்று காலை 9.00 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏலம் தொடர்பான தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு Inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும் அல்லது ஈரோடு மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஏல அறிவிப்பில் மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.




