கோவை: மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கான சமைக்கப்படும் சமையற்கூடத்தில் காலை உணவு திட்டத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் உணவுகளை மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
உணவின் சுவை, தரம் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் தோறும் விநியோகிக்கப்படும் உணவுகளின் அளவுகள் குறித்து கேட்டறிந்து, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை உட்கொண்டார்.
மேலும் அங்கு சமையல் செய்யும் சமையலர்களிடமும் தேவையான பொருட்கள் அனைத்தும் உள்ளதா? கூடுதலாக தேவைப்படுகிறா என அனைத்தையும் கேட்டறிந்தார்.


