கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை- நிலை தடுமாறிய வாகன ஓட்டிகள்…

கோவை: கோவை புறநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினர்.

கோவை, துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் நரசிம்மநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

அக்னி நட்சத்திரம் தொடங்கி சில நாட்கள் ஆன நிலையில் வெயில் வாட்டி வந்தது இறந்த போதும் கோவை மாவட்டத்தில் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது இந்த நிலையில் இன்று கோவை துடியலூர் கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன் பாளையம் நரசிம்மநாயக்கன் பாளையம் பன்னீர் மழை தடாகம் இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.

Advertisement

இதனால் சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதே சமயம் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வாகனத்தை சாலையோரங்களில் நிறுத்தினர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

கோவை ராம் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.