கோவை: கோவை புறநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினர்.
கோவை, துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் நரசிம்மநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி சில நாட்கள் ஆன நிலையில் வெயில் வாட்டி வந்தது இறந்த போதும் கோவை மாவட்டத்தில் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது இந்த நிலையில் இன்று கோவை துடியலூர் கவுண்டம்பாளையம் பெரியநாயக்கன் பாளையம் நரசிம்மநாயக்கன் பாளையம் பன்னீர் மழை தடாகம் இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதே சமயம் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி வாகனத்தை சாலையோரங்களில் நிறுத்தினர்.


