தமிழக அரசு உடனடியாக இதனை செய்ய வேண்டும்- மாதர் சங்கம் வலியுறுத்தல்

கோவை: பெண்களின் பாதுகாப்பு தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்தின் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேசிய மாதர் சங்கத்தினர் இந்த விவகாரத்தில் மூன்று பேர் உடனடியாக கைது செய்யப்பட்டாலும் பெண்கள் பாதுகாப்பு தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் இது போன்று சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் சிறையில் இருந்து வெளிவராத வண்ணம் வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Recent News

கோவையில் ரோட்டில் குப்பை வீசினால் நோட்டீஸ்- மாநகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை…

கோவை: கோவை மாநகரில் குப்பைகளை ரோட்டில் வீசுவோருக்கு எச்சரிக்கை நோட்டீஸை மாநகராட்சி நிர்வாகம் அனுப்புகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp