இறந்தும் மூவருக்கு வாழ்வு கொடுத்தார் பாஸ்கரன்!

கோவை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பாஸ்கரன் என்ற இளைஞரைன் உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.

Advertisement

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற விவசாயி. இவரது மனைவி விசாலாட்சி இவர்களுக்கு பாஸ்கரன் (29) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

பாஸ்கரன் 10 ஆம் வகுப்பு படித்து விட்டு அங்கு உள்ள பேப்பர் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரனின் தாயார் விசாலாட்சி இறந்து விட்டார். 

அதற்கு 16 ம் நாள் காரியம் நடைபெற இருந்தது. இதற்காக பொருட்கள் வாங்க பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா, 11 மாத குழந்தை மற்றும் அவரது சகோதரி உள்ளிட்டோர் காரில் உடுமலைப்பேட்டைக்குச் சென்றனர். 

Advertisement

அங்கு பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது வழியில் அவர்களது கார் விபத்தில் சிக்கியது. இதில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், பாஸ்கரன் ஆபத்தான கட்டத்தில் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

Advertisement

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச் சாவு அடைந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். 

அப்போது அவரது குடும்பத்தினர், பாஸ்கரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் மற்றவர்கள் பயன்பெறுவார்கள் என்பதால் அவற்றை தானமாக கொடுக்க முன்வந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது கண், கல்லீரல், சிறுநீரகம், உள்ளிட்ட பாகங்கள் தானமாக அளிக்கப்படு உள்ளது. இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற உள்ளனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...