கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை
உணவுகள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி 29.07.2026 மற்றும் 30.07.2026 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ் கீரிம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ் ஆகியவை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது.
இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1,500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




