கோவை: சூலூர் அருகே எம்.எல்.ஏ விற்கு வரவேற்பு கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது
கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார்(தவெக) நேற்றிரவு கணியூர் பகுதியில் பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்துள்ளார்.
அங்கு திரண்ட தவெகவினர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்க முயன்ற போது அக்கட்சியை சேர்ந்த வசந்தி என்ற நிர்வாகியை, தவெகவை சேர்ந்த மற்றொரு தரப்பு நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.
இதனால் MLA சுகுமார் முன்பே இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் பேசி கொண்டு இருந்த போதே தவெகவினர் இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து இரு தரப்பு தவெகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.
அதில், தன்னை தவெக நிர்வாகிகள் தாக்கியதாக அக்கட்சியை சேர்ந்த வசந்தி என்ற பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். இந்த மோதல் விவகாரம் குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





