உக்கடம் பேருந்து நிலையத்தில் வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனை! வாலிபர் கைது

கோவை: உக்கடம் பேருந்து நிலையத்தில் வாட்ஸ்-அப் மூலம் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி எண்களை அனுப்பி ஆன்லைனில் பணம் வசூலித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

கோவை உக்கடம் போலீசார் நேற்று மாலை உக்கடம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறை அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளின் 3 எண்களை வாட்ஸ்-அப் குழுக்களில் அனுப்பி, பொதுமக்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை உக்கடம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் உக்கடம் கே.ஜி. லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பயாஸ்தீன் (33) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ்தீனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

பின்னர் கைது செய்யப்பட்ட பயாஸ்தீன் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...