கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

கோவை: கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இன்று (01.08.2025) கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்தில் 68வது வார்டுக்கு சிவானந்த காலனி, வியசமந்திர் மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.

பொள்ளாச்சி நகராட்சியில் 5,6,7 வார்டுகளுக்கு மகாலிங்கபுரத்திலுள்ள, மீனாட்சி மஹாலிலும், வால்பாறை நகராட்சியில் 9,10,11,12 ஆகிய வார்டுகளுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும்,

மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 6,7,8,9,10,12,13 ஆகிய வார்டுகளுக்கு வார்டு8-ல் உள்ள ஸ்ரீசௌடேஸ்வரி மஹாலிலும், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் சுப்பேகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, தாத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு சுப்பேகவுண்டன்புதூரில் உள்ள சஹானா மஹாலிலும்,

Advertisement

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் குப்பனூர், வடக்கலூர் ஊராட்சிகளுக்கு ஆனையூர் ராணி மஹாலிலும் என மொத்தம் 6 இடங்களில் கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Advertisement

எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த செய்தியை உங்கள் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி,...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...