தவெக அரசியல் வேலைகளை ஆர்வமாக பார்க்கிறோம்- வானதி சீனிவாசன் பேட்டி…

கோவை: தவெக அரசியல் வேலைகளை கொஞ்சம் ஆர்வமாக நாங்கள் பார்க்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் , ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் கேரள கிளம்பினார்.

இதனையடுத்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், தமிழக அரசியல் கட்சி களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது, கோவையில் முன்னாள் ஊழல் அமைச்சர் , இந்நாள் தியாகியை கோவை தெற்கு தொகுதிக்கு வேட்பாளராக திமுக அறிவித்து இருக்கிறார்கள் தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஜெயிலில் ஒரு அமைச்சரை வைத்திருந்த பெருமை திமுகவிற்கு உண்டு என தெரிவித்தார்.


கடந்த முறை போல பத்துக்கு பத்து தொகுதிகளை வெற்றி பெறுவோம்
இதுபோன்ற ஊழல் கறை பதிந்த அமைச்சரை கோவைக்கு அனுப்பி மக்களை அவமரியாதை செய்திருக்கிறது திமுக என தெரிவித்தார்.

Advertisement

விஜய் இன்று தான் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார், 10 நாள் கழித்து பாருங்கள் அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று அவர்களின் தேர்தல் அரசியல் என்பது வேறு,
அவர்களுக்கு இது முதல் தேர்தல் , எனவே ஒரு ஆர்வம் இருக்கலாம். விஜயினுடைய பேச்சை சீரியஸாக எடுத்துக் கொண்டால், திமுகவிற்கு மாற்றுத் தவெக என்பது இல்லை என தெரிவித்தார். முதல்வர் தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கும் இடையே போட்டி என சொல்கின்றார் , நாங்கள் திமுகவில் ஒரு குடும்பத்திற்கும் வளர்ச்சிக்குமான தேர்தல் என சொல்கிறோம் என தெரிவித்தார்.
தவெக அரசியல் வேலைகளை கொஞ்சம் ஆர்வமாக நாங்கள் பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர்
அண்ணாமலை, கோவையில் இருந்தும் பிரதமரை வரவேற்க வரவில்லையே என்ற கேள்விக்கு? நான் வந்தவுடன் அண்ணாமலை எப்பொழுது வருகிறார் என கேட்டேன் எனவும்
லிஸ்டில் அவரது பெயர் கொடுக்கப்பட்டிருந்தது,அவர்தான் வரவில்லை சொன்னார்கள் எனக்கூறிய அவர்,
அது என்னவென்று கேட்கிறேன் என பதில் அளித்தார்.

Advertisement


பா.ஜ.கவில் தனித்தனி ஆதரவாளர் என்று இல்லை , அண்ணாமலையின் அன்பு கூட்டத்தில் நாங்களும் இருக்கிறோம், அவர் எங்கள் அன்புக்குரிய தம்பி. வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னர் அவருக்கு கொடுக்கவில்லை , இவருக்கு கொடுக்கவில்லை என சொல்ல முடியாது, யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது கட்சி தலைமைக்கு தெரியும் ஐந்து ஆண்டு வேலை பார்த்தவர்களுக்கு ஒரு ஆசை இருக்கும், ஆனால் யாருக்கு கொடுக்க வேண்டும் அவர்களால் வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை பார்த்து கட்சி கொடுக்கும் என தெரிவித்தார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...