கோவையில் இருந்து மதுரை புறப்பட்டார் துணை குடியரசு தலைவர்

கோவை: கோவை மற்றும் திருப்பூரில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் மதுரை புறப்பட்டார்.

துணைக் குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தனி விமான மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவையில் கொடிசியா அரங்கில் சிட்டிசன் ஃபோரம் அமைப்பின் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்டார். பின்னர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேரூர் ஆதீனம் மடாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மாலை திருப்பூர் சென்றார்.

இன்று திருப்பூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரை செல்வதற்காக சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்து தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

துணை குடியரசு தலைவர் காரிலேயே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வருகை புரிந்து மதுரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News

கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது…

கோவை: ராணுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது. கோவை அண்ணா சிலை அருகே உள்ள...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp