பட்டியல் இன மக்கள் முதலமைச்சர் ஆவது எப்போது?- திருமாவளவன் கூறிய பதில்…

கோவை: பட்டியல் இன மக்கள் அரசியல் வலிமை பெற வேண்டும் என்றும் அப்பொழுதுதான் முதலமைச்சர் ஆகும் நிலை வரும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை வேலாந்தாவளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய தொல் திருமாவளவன் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோரை மக்கள் தேவைகளுக்காக சந்திப்பது நமது கடமை என்று தெரிவித்தார். இன்று மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை சந்தித்துள்ளோம் அவரிடம் பழங்குடியினர் மக்களின் நலன்கள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசின் துணை, உதவி மற்றும் நிதி தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொள்வதாக கூறினார். இந்திய அரசு விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் அரசு திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்தினால் அவ்வளவுதான் வளர்ச்சிப் பணிகள் அப்படியே நின்றுவிடும் என்று கூறினார்.

நேச்சுரோபதி என்பது மருந்தே இல்லாத மருத்துவம், உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் உள்ளத்திற்கான பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடல் நலத்தை பேணிக்காத்து வாழ்நாளை நீட்டிக்க முடியும். மருந்தே உட்கொள்ளாமல் நோய் வருவதை தடுக்க முடியும் என்றார். நாம் உணவை வீணாக்குகிறோம் என்று கூறிய அவர் 6 வகை உணவு, 8 வகையான இனிப்பு, 12 வகை பதார்த்தங்கள், 3 வகை பாயாசங்கள் என சமைத்து பின்னர் வீணடிக்கிறோம் என்றார்.

Advertisement

ஆடம்பர நிகழ்ச்சிகளிக் ஒரு மனிதன் சாப்பிடுவதைவிட 5 மடங்கு உணவை இலையில் வைத்து, அவனால் சாப்பிட முடியாத நிலையில் தூக்கிப்போடும் நிலை உள்ளது. அந்த உணவு 5 ஏழைகள் சாப்பிடும் அளவிற்கான உணவாக உள்ளது என்ற அவர் இதுபோன்ற ஆடம்பர விழாக்களில் பங்கேற்று, சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்கிறோம் என்றார்.

நம் சொந்த வேலைகளை நாமே செய்தால் ஜிம்முக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்றும் அதன் மூலம் நமது வாழ்நாளையும் நீட்டிக்க முடியும் என்றும் இதுதான் நேச்சுரோபதி இயற்கை மருத்துவம் என்றார். இலைகளில் இருந்து, மூலிகைகளில் இருந்து மருந்து தயாரிப்பது இயற்கை மருத்துவம் அல்ல அது சித்த மருத்துவம் என்றார்.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மக்களுக்கு மத்திய அரசின் உதவி வேண்டும் என்று கோரிய அவர் 1% மட்டுமே இருக்கிறார்கள் என்பதால் பழங்குடியின மக்கள் கவனிக்கப்படாமல் உள்ளனர் என்றும் அவர்களுக்கான சாதி சான்றிதழ் பெறுவதில் கூட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் இதனை ஒன்றிய அமைச்சர் ஜுயல் ஒரம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்

கட்சி எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், மனித நேயம் என்பதே மனிதர்களுக்கு உயர்ந்தது. நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை உணர்ந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

முன்னதாக பேசிய அமைச்சர் வன்னி அரசு
இங்கு ஒன்றிய பழங்குடியினர் அமைச்சர் ஜுயல் ஓரம் வந்திருக்கிறார். நம் மாநிலத்திற்கான நிதியைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் நான் வந்திருக்கிறேன் என்றார்.

நம்முடைய சட்டமன்றத்தில் பழங்குடியின மக்களுக்கும், ஆதிதிராவிடர் மக்களுக்கும் நிறைய திட்டங்களை அறிவித்துள்ளோம் என்றும் பழங்குடியின மக்களின் மரபு நடையை பாதுகாப்பதும், மொழியை மீட்டு எழுத்துருவாக்கம் செய்யும் திட்டத்தையும் அறிவித்துள்ளோம் என்றும் கூறினார்.

செங்காந்தள் மலரை சாகுபடி செய்து, அதனை நேச்சுரோபதிக்கு கொடுக்கும் திட்டத்தையும் கொடுத்திருக்கிறோம்.
நோச்சுரோபதி மருத்துவத்தையும், யோகாவையும் மதம் சார்ந்து கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். இது மருத்துவத்திற்கே எதிரானது என்றார்.
இந்தத்துறைகளை மதம் சார்ந்து கொண்டு செல்வது இயங்கியலுக்கு எதிரானது என்றும் சாடினார். சமூக நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு நிதிகளை ஒதுக்குகிறது என்றும் மத்திய அரசும் சமூக நீதித்துறையின் திட்டங்களுக்கு நிதியை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி என்று தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம் மலைவாழ் மக்களுக்கு அவர்களுடைய நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு வீடு கட்டுதல் ஜாதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறினார்.

அமைச்சர் வன்னியரசு பேசும்பொழுது சில தனியார் யோகா நிறுவனங்கள் யோகா கற்று தருவது என்று மதம் சார்ந்த கருத்துக்களை பரப்புவதாக கூறியிருக்கிறார். மருத்துவ மருத்துவமாக இருக்க வேண்டும் யோகா யோகாவாக இருக்க வேண்டும் அதற்குள் மதம் சார்ந்த செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்பதை தான் சுட்டிக்காட்டினார் என்று தெரிவித்தார்.

மதசார்பற்ற கொள்கை என்ற ஒன்றை கடைபிடிக்கும் பொழுது ஒரு அமைப்போ அல்லது அரசோ மதம் சார்ந்த கருத்து பிரச்சாரம் செய்யக்கூடாது அது மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று தெரிவித்தார்.

பட்டியல் இன மக்களுக்கான முதலமைச்சரை பதவி என்பது எப்பொழுது வரும் என்ற கேள்விக்கு, அவர்கள் இன்னும் ஒரு அரசியல் சக்தியாக வலிமை பெற வேண்டும் என்றும் அவ்வாறு வலிமை பெறுகின்ற பொழுது அந்த வாய்ப்பு கிட்டும் என்று நம்புவதாக பதில் அளித்தார்.

முதலமைச்சர் உடனான கூட்டத்தில் துணை முதலமைச்சர் குறித்தான நகர்வுகள் அல்லது பேச்சு வார்த்தை இருக்குமா என்ற கேள்விக்கு அதை நீங்கள் வந்து கலந்து கொண்டு பரிசீலியுங்கள் என்ற நகைச்சுவையாக பதில் அளித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...