உலக இரத்ததான தினம்- இரத்ததானம் செய்த எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்…

கோவை: உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ இரத்த தானம் செய்தார்.

Advertisement

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ரத்தம் தானம் செய்தார்.

ஜீன் 14 ம் நாளான இன்று உலக இரத்த தானம் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் த வெ க கட்சி அலுவலகத்தில் வி ஜி எம் மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர்.

இந்நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் முதல் நபராக பங்கேற்று இரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இரத்த தானம் செய்தனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சிலர் பிரச்சனைகளை ஏற்படுத்த முயற்சி- சூலூர் எம்.எல்.ஏ பேட்டி…

கோவை: கணியூர் விவகாரத்தில் சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்வதாக எம்.எல்.ஏ சுகுமார் தெரிவித்துள்ளார். கணியூரில் தமிழக வெற்றி கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு வீடியோ வைரலான நிலையில் சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...