கோவை: ராமநாதபுரம் மேம்பாலத்தில் தொங்கிய இளைஞரை பொதுமக்கள் உயிருடன் மீட்ட சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இராமநாதபுரம் மேம்பாலத்தில் இன்று மாலை, பாலத்தின் வெளிப்புற தடுப்பில் இளைஞர் ஒருவர் தொங்கிக் கொண்டிருப்பதை கீழே சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் சத்தமிட்டு, மேம்பாலத்தின் மீது சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
இதையடுத்து, மேம்பாலத்தில் இருந்த சிலர் விரைந்து சென்று, தொங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கைகளைப் பிடித்து மேலே இழுத்து உயிருடன் மீட்டனர்.
Also Read: உக்கடம் மேம்பாலத்தில் ஆளில்லாமல் சென்ற பைக்; பரபரப்பு வீடியோ வைரல்
இந்த பரபரப்பான மீட்பு சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோ காட்சிகள்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்கப்பட்ட இளைஞரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக அந்த நிலையில் இருந்தார், இது தற்கொலை முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களின் உடனடி விழிப்புணர்வும், துரிதமான செயல்பாடும் காரணமாக இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்ட நிலையில், இளைஞர் மீட்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.





