இந்த மாதத்தில் மட்டும் 2வது முறை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.

கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கில், மாநகரில் தினமும் சேகரமாகும் 1,100 டன் குப்பை கொட்டப்படுகிறது. இங்கு வெயிலின் தாக்கம் மற்றும் சில சமூகவிரோதிகளின் செயல்களால் அடிக்கடி குப்பை தீப்பற்றி எரிகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.

Advertisement

இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்கும், மாநகராட்சி துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில், கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.

சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து குப்பையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

Advertisement

இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த 16ம் தேதி இரவில் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜெ., ஆத்மா இபிஎஸ்க்கு தண்டனை கொடுத்துள்ளது: கோவையில் செங்கோட்டையன் பேட்டி!

ஜெயலலிதா ஆத்மாதான் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.