வால்பாறை அருகே சாலையின் குறுக்கே நின்ற கபாலி- வாகன ஓட்டிகள் அச்சம்

கோவை: வால்பாறை அருகே ஒற்றை காட்டு யானை வாகனங்களை மறைத்து நின்றது.

வால்பாறை அடுத்த கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் கபாலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்த யானை சாலைகளில் அவ்வப்போது நடமாடுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அச்சத்துடன் அவ்வழியே பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு வாகனங்களை வழிமறித்து நின்ற யானை சாலையோர மரங்களை உடைத்து தின்றவாறு சாலையை மறைத்து நின்றுள்ளது.

அதேபோல் அதிரப்பள்ளியில் இருந்து மழுக்கபாறை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்து மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனம் எதிர்புறமாக சாலையில் நின்றது. அதனிடையே சில வாகனங்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நீண்ட நேரம் அங்கேயே நின்ற யானையை தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனத்துறைக்குள் விரட்டினர். பின்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இது போன்று அடிக்கடி அந்த யானை சாலையை வழிமறித்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே இருப்பதால் யானையை வனப்பகுதிக்குள்ளேயே வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.