விளாங்குறிச்சியில் அதிர்ச்சி; லாரி முன் பாய்ந்த பெண்!

கோவை: கோவை விளாங்குறிச்சியில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென அவ்வழியாக வந்த லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வால்பாறையைச் சேர்ந்தவர் தனலட்சுமி (40). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தனது ஆண் நண்பருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவர் திடீரென அந்த வழியாக வந்த லாரி முன் பாந்தார். அதில் லாரி அவர் மீது ஏறி இறங்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து தனலட்சுமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனலட்சுமி எதற்காக கோவை வந்தார்? எதற்காக லாரி முன் பாயந்து தற்கொலை செய்து கொண்டார்? ஆண் நண்பருடன் தகராறில் ஈடுபட்டு லாரி முன் பாய்ந்தாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விஜய் முதல்வர் தான், துணை முதல்வர் அல்ல- கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

கோவை: விஜய் முதல்வராகத்தான் வந்துள்ளாரே தவிர துணை முதல்வர் ஆவதற்கு இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.