கோவையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்- அதே ஆசிரியர்கள் தான் வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை…

கோவை: அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள்
கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் இந்த வருடம் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார் 200 மேற்பட்டோர் உள்ளனர்.

இந்த நிலையில் அக்கவுண்டன்சி மற்றும் வேதியல் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சாந்தி மற்றும் சத்யா ஆகியோர் திடீரென பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டதால் படிப்பு பாதிக்கப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தின் காரணமாக மிகவும் பாதிக்கபட்டு உள்ளதாகவும் எனவே பணியிட மாற்றம் செய்யபட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் தங்களது கல்வியின் நலன் கருதி மீண்டும் அவர்களை அதே பள்ளியில் பணியமர்த்த செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...