Coimbatore accident: போதையால் மாறிய பாதை: கோவை;அவினாசி ரோட்டில் கோர விபத்து – VIDEO

Coimbatore accident: கோவையில் மதுபோதையில் தாறுமாறாகச் சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை அவிநாசி சாலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு விமான நிலையம் நோக்கி கார் வேகமாக சென்றது. அந்த கார் வரதராஜா மில் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது திடீரென்று சென்டர் மீடியம் சுவரில் மோதியது.

அதிவேகமாக சென்று மோதியதால் கார் தூக்கி எறியப்பட்டு இடதுபுறம் சென்று விழுந்தது. அப்போது அந்த வழியாக ரோட்டில் சென்ற 2 பைக்கில் மீது கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து நடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் காருக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது காரில் வந்த 2 நபர்களும் காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தனர். சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் அவர்களால் உடனடியாக வெளியில் வர முடியவில்லை.

Advertisement

அதன் பிறகு அந்த 2 வாலிபர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இரவு நேரத்தில் அவிநாசி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்களும் காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய் பிரிவு
போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Flipkart Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...