கோவை: கோவையில் பைக்கின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவைபுதூர் ரிங் சாலையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென சாலை குறுக்கே 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.
Read news: சுங்கத்தில் பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து! – VIDEO
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி, தனது பைக்கை சாலையோரமாக நிறுத்தி விட்டு, பயத்தில் கீழே இறங்கித் தூரமாக ஓடிவிட்டார்.
அப்போது அந்தப் பாம்பு அங்கு இருந்து நகர்ந்து செல்லாமல், நிறுத்தப்பட்டிருந்த அந்த இருசக்கர வாகனத்தின் மீது மெதுவாக ஏறியது.
பைக்கின் முன் பகுதிக்குச் சென்ற அந்த நல்ல பாம்பு, அங்கு அமர்ந்தபடி தலையை உயர்த்தி படம் எடுத்தாடியபடி நீண்ட நேரம் நின்றது.
இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை நிறுத்தி, அதிர்ச்சியுடனும், பயத்துடனும் இந்த காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.
சிறிது நேரம் பைக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த
பாம்பு, பின்னர் தானாகவே இறங்கிப் புதருக்குள் மறைந்தது.
Read news: பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக குற்றச்சாட்டு… காவலர் மீது இளைஞர் புகார்…!
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாம்பு தனது பயணத்தைத் தொடர லிப்ட் கேட்டிருக்கும் போல என இணையவாசிகள் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

