கோவையில் 10 கோடி மதிப்பிலான வைரம் தங்கம் பறிமுதல்…

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் 10 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அதிகாரிகள் டெம்போ ட்ராவலர் வாகனத்தை சோதனை செய்த போது 10 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் கொண்டுவரப்பட்டது கண்டறிப்பட்டது.

ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் சேர்த்தனர். விசாரணையில் அது தனியார் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரியவந்தது.

Advertisement

அதை கைப்பற்றிய தேர்தல் தேர்தல் பறக்கும் அதிகாரி படை சாமிநாதன் காவல் உதவி ஆய்வாளர் ஜில்லி கிரிஸ்டி ட்ராவலர் தனசேகரன் ஆகியோர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு தங்க நகைகள் ஆய்வு செய்தனர்.

அதன் மதிப்பு 10 கோடியே 18 லட்சத்து 21,000 என கண்டறியப்பட்டு அதை அரசு கருவூலத்திற்கு கொண்டு சென்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.