கோவையில் கள்ளுக் குடித்து ஆர்ப்பாட்டம்!

கோவை: கள் மீதான தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் கள்ளுக் குடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பனை மற்றும் தென்னை விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வெவ்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகள் மற்றும் கண்டனங்கள் அடங்கிய பதாகைகளைக் கழுத்தில் அணிந்தவாறும், கையில் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், தென்னங்கீற்றை கைகளில் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், கள் மீது தமிழக அரசு விடுத்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி கள்ளுக் குடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Advertisement

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கலப்படத்தைக் காரணம் காட்டி தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை விதிக்கப்படவில்லை. அங்கெல்லாம் கலப்படத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள், தமிழ்நாட்டில் முடியவில்லையா?” என்றனர்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மீண்டும் திறக்கப்படும் கோவை குற்றாலம்- வனத்துறை அறிவிப்பு…

கோவை: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம். தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.