கோவையில் இதுவரை எத்தனை பேர் வாக்களித்துள்ளார்கள் தெரியுமா? எந்த தொகுதியில் அதிகம்?

கோவை: கோவையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி எத்தனை பேர் வாக்களித்துள்ளார்கள் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கோவையைப் பொறுத்த வரையில் காலை 7 மணி முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களில் குவிந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 5 லட்சத்து 5 ஆயிரத்து 843 பேர் வாக்களித்து இருந்தனர்.

Advertisement

11 மணியளவில் இந்த எண்ணிக்கை 10 லட்சத்து 59 ஆயிரத்து 871 ஆக உயர்ந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 15 லட்சத்து 98 ஆயிரத்து 380 ஆக உயர்ந்தது.

இதனிடையே காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கோவை மாவட்டத்தில் மொத்தமாக 19 லட்சத்து 52 ஆயிரத்து 966 பேர் வாக்களித்துள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ள நிலையில், 3 மணி நிலவரப்படி மொத்தமாக 71.16% பேர் வாக்களித்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சூலூர் தொகுதியில் 74.47 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

கோவையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக 68.70% பேர் வாக்களித்திருந்த நிலையில், இந்த முறை 3 மணி நிலவரப்படி 74.47% பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...