2026ல் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்- வாக்கு செலுத்திய கோவை அதிமுக வேட்பாளர் நம்பிக்கை…

கோவை: 2026ல் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என வாக்கினை பதிவு செய்த பின் பேட்டி அளித்த சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் திரளாகக் கூடிச் சென்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், வேட்பாளர்களும் பொதுமக்களுடன் இணைந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேரன்மாநகர் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் அவரது குடும்பத்தினருடன் வந்து வாக்கு பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர்.ஜெயராம்“நாங்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்துள்ளோம். திமுக அரசை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் கண்டிப்பாக மாற்றம் நிகழும்” என தெரிவித்தார்.

Advertisement

மேலும், “பிரதமர் மோடி ஆதரவுடன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

11%ஐ 4-ஆக குறைத்தவர் நயினார்; கோவையில் செங்கோட்டையன் விமர்சனம்!

கோவை: 11%ஐ 4-ஆக குறைத்தவர் நயினார் நாகேந்திரன் என கோவையில் செங்கோட்டையின் விமர்சித்துள்ளார். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அறிவாலயத்தில்...

Latest News Coimbatore

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.