கோவையில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை: பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை மாநகராட்சிக்கு 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-


பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு செயல்பட்டு வரும் பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ், சமயபுரம் பகுதியில் உள்ள பவானி தடுப்பணையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தினால் கதவணை மற்றும் எந்திரங்களின் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக இன்று (7-5-2026) முதல் 10-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பில்லூர்-3 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

Advertisement

எனவே, கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.