கோவையில் கட்டணமில்லா டயாலிசிஸ் சிகிச்சை- மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு…

கோவை: கோவையில் கட்டணமில்லா டயாலிசிஸ் சிகிச்சை பெற மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சீத்தாலட்சுமி அரசு நகர்புற ஆரம்ப சுகாதாநிலைய வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட பொது மக்களுக்கு கட்டணமில்லாமல் டயாலிசிஸ் மேற்கொள்ள 10 எண்ணிக்கையிலான டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட புதிய டயாலிசிஸ் மையம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது.

அனுபவம் வாய்ந்த மருத்துவக்குழுவினரால் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் இரு வேலையில் 20 நோயாளிகள் இம்மையத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழலில் இயங்கி வரும் இம்மையத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த சேவையானது முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இம்மையம் செயல்படுகிறது.

Advertisement

எனவே, பொது மக்கள் இம்மையத்தினை 9498599703, 9159557631 என்ற எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, கேட்டுக்கொண்டுள்ளார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மீண்டும் திறக்கப்படும் கோவை குற்றாலம்- வனத்துறை அறிவிப்பு…

கோவை: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம். தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.