தவெக ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர்…

கோவை: தவெக ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் 1.2 கிமீ மேம்பால பணிகளை பாஜக தேசிய செயலாளர் தமிழக பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் நேரில் பார்வையிட்டார். மேம்பால ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் பொறியாளரிடம் மேம்பால பணிகளின் நிலைகள் குறித்தும் எப்பொழுது முடிக்கப்படும் என்று கேட்டறிந்தார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த மேம்பால பணிகள் நிறைவடைய போகிறது என்றார். மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தும் போது பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் குறிபிட்டார்.

இந்த மேம்பால பணிகள் நிறைவடையும் பொழுது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக ஆட்சி குறித்தான கேள்விக்கு, இந்த ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தை கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறது என்றும் மின்சாரத் துறையிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது இது போன்ற பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

அமைச்சர் சரத்குமாருக்கு வலுக்கும் கண்டனங்கள்- கோவையில் மீண்டும் ஆர்ப்பாட்டம்…

கோவை: அமைச்சர் சரத்குமாரை கண்டித்து துடியலூர் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். துடியலூர் அருகே போதைப் பொருள் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக்கழக அமைச்சர் சரத்குமார் பதவி விலக்கோரி திமுக மாணவர்...

Latest News Coimbatore

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.