கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சட்ட ஆலோசகருக்கான பணி நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள வழக்கறிஞர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி நியமனம் செய்யப்படும் சட்ட ஆலோசகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வேண்டும். நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர் காவல் துறையின் நலன்களுக்கு எதிரான வழக்குகளை எடுத்துக்கொள்ளக் கூடாது
மாத ஊதியமாக ரூ.20,000/- வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள வழக்கறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24.07.2026-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சட்ட படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், மாவட்ட நீதிமன்றங்களிலோ, உயர் நீதிமன்றங்களிலோ குறைந்த பட்சம் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் மற்றும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்படாத நபராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




