கோவை எஸ்பி அலுவலகத்திற்கு சட்ட ஆலோசகர் தேவை- விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சட்ட ஆலோசகருக்கான பணி நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள வழக்கறிஞர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி நியமனம் செய்யப்படும் சட்ட ஆலோசகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வேண்டும். நியமனம் செய்யப்படும் பட்சத்தில், அவர் காவல் துறையின் நலன்களுக்கு எதிரான வழக்குகளை எடுத்துக்கொள்ளக் கூடாது

மாத ஊதியமாக ரூ.20,000/- வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள வழக்கறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24.07.2026-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement

சட்ட படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், மாவட்ட நீதிமன்றங்களிலோ, உயர் நீதிமன்றங்களிலோ குறைந்த பட்சம் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் மற்றும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்படாத நபராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...