கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு 3 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நர்சிங் கல்லூரியை துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளைய தினம்(22.07.2026) திறந்து வைக்கிறார்.
இதனை முன்னிட்டு கோவை மாநகரில் ஏற்கனவே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுடன் சேர்த்து ரேஸ்கோர்ஸ், அவினாசி ரோடு, லட்சுமி மில், குப்புசாமி நாயுடு மருத்துவ மனை வளாகம், ஹோப்ஸ், கொடிசியா,சின்னியம்பாளையம்,
காளப்பட்டி, நேருநகர் போன்ற பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கபட்டுள்ளது.
இந்த பகுதியில் நாளை மறுதினம் காலை 11 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் தடையை மீறி டிரோன் பறக்க விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





