கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி வழங்காததை கண்டித்து, வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினரின் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி வழங்காததை கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் முக்கிய தொழில், கல்வி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகரமான கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் என அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், கோவை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் ஒப்புதல் வழங்காதது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள், “கோவைக்கு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்”, “மத்திய அரசு தமிழகத்தின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை தாமதப்படுத்தக் கூடாது” என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், மத்திய அரசை கண்டித்து பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஈஸ்வரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக பந்தயசாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில், வருமான வரித்துறை அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
போராட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், “கோவை போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியமானது. மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி வழங்காததை கண்டித்து, வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினரின் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.





