கோவையில் கலை கட்டிய சுதந்திர தின விழா

கோவை: கோவையில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Advertisement

கோவையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் என சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாட்டின் 80வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ உ சி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்மை நிற புறாக்களை பறக்கவிட்டார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக வாகா எல்லையில் நடைபெறும் அனைவருக்கும் போலவே இங்கும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக கோவை மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 106 பேருக்கும் 74 அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் 222 பேருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

Advertisement

இந்த முறை கூடுதல் சிறப்பாக கோவை மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தற்பொழுது உள்ள நவீன வசதிகள் குறித்தும் பெண்களின் பாதுகாப்பு தற்காப்புகள் குறித்தும் செய்முறை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

“மக்களே நமது முதலாளி; நாம் அவர்களின் பணியாளர்கள்” – சுதந்திர தினத்தில் MLA கனிமொழி சந்தோஷ்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றிய கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ், மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான கடமை என உறுதியளித்தார்.

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...