கோவை அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்- இந்த முறையாவது அரசு செவி சாய்க்குமா என ஆதங்கம்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு பணி நிரவல் முறையை கைவிட்டு அனைத்து எம்ஆர்பி செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் மற்றும் செவிலியர் போதகர் பணியிடங்கள் தொகுப்பூதிய முறையில் உருவாக்கிடாமல் நிரந்தர பணியிடங்களாக உருவாக்க வேண்டும்

நர்சிங் டூடர்ஸ் பதவி உயர்வில் ஏற்கனவே உள்ள நடைமுறையை செயல்படுத்திட வேண்டும், மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ளதைப் போலவே செவிலியர் அலுவலர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் மேலும் செவிலியர்களுக்கான முறையான பணி வரன்முறையை வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை இசை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் அவர்களது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கருப்பு பேட்ச் அணிந்து கோரிக்கை பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி கோரிக்கைகளையும் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...