கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க பெங்களூரு–திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பெங்களூரு கண்டோன்மென்ட் – திருவனந்தபுரம் வடக்கு செல்லும் சிறப்பு ரயில் (06579), ஆகஸ்ட் 28-ம் தேதி மாலை 4.40 மணிக்கு பெங்களூருவில் புறப்பட்டு, மறுநாள் காலை திருவனந்தபுரம் வடக்கை சென்றடைகிறது.
இந்த ரயில் கோவை மாவட்டத்தின் போத்தனூர் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி அதிகாலை 1.44 மணிக்கு வந்து, 1.45 மணிக்கு புறப்படும். அதேபோல் திருப்பூர் ரயில் நிலையத்தில் நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து 12.22 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கு – பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் (06580), ஆகஸ்ட் 29-ம் தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படுகிறது.
இந்த ரயில் போத்தனூரில் இரவு 8.59 மணிக்கு வந்து, 9 மணிக்கு புறப்படும். திருப்பூரில் இரவு 9.38 மணிக்கு வந்து 9.40 மணிக்கு புறப்படும்.
இந்த சிறப்பு ரயில்களில் ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர், பொது இரண்டாம் வகுப்பு மற்றும் லக்கேஜ்-கம்-பிரேக் பெட்டிகள் இடம்பெறும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.





