மூதாட்டி மர்ம மரணம்!தண்ணீர் தொட்டியில் சடலம்; போலீஸ் விசாரணை

கோவை : கோவை வெள்ளலூரில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 68 வயது மூதாட்டி உயிரிழந்தார்; தவறி விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை

Advertisement

கோவை வெள்ளலூர், இடையார்பாளையம், மேகராலி வீதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி நாகரத்தினம் (68). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த 31-ம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் காலை சுமார் 6 மணியளவில் நாகரத்தினத்தின் மகன் ஜெகதீஷ் (36) எழுந்து வீட்டில் பார்த்தபோது, அவரது தாயை காணவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டின் சுற்றுப்புறத்தில் தேடியபோது, வீட்டின் தண்ணீர் தொட்டியில் நாகரத்தினம் மூழ்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து உடனடியாக நாகரத்தினத்தை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக் குழுவினர் நாகரத்தினத்தை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், நாகரத்தினத்தின் உடலைக் கைப்பற்றி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான காரணம் குறித்து மேலும் தெளிவாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகரத்தினம் தண்ணீர் தொட்டிக்குள் எவ்வாறு சென்றார், அவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தாரா அல்லது உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி, நாகரத்தினத்தின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டின் தண்ணீர் தொட்டியில் மூதாட்டி மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...