தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு
நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், பேரூர் தாலுகா, தென்கரை பஞ்சாயத்தில் 600-க்கும் மேற்பட்ட இளங்கலை மாணவர்கள் பங்கேற்புடன் பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர் முனைவர் ரவீந்திரன் தொடங்கி வைத்தார்.

கிராம மக்களின் தேவைகளை ஆராய்ந்து, ஊரக வளர்ச்சி நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, அதற்கேற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு அவர் மாணவர்களை வலியுறுத்தினார். மேலும், விளைச்சலையும் பண்ணை வருவாயையும் அதிகரிக்க, நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விசாயிகளிடம் சென்றடைய, செயல்விளக்கம் அளிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார்.

மாணவர் நல மையத்தின் முதன்மையர் முனைவர் பாலசுப்பிரமணியன், சமூகத்தை மாற்றியமைத்து மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் குறிப்பிடத்தக்க மேற்கொள்வதில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் பங்கை எடுத்துரைத்தார். வேளாண்மைப் பொறியியல் நடவடிக்கைகளை முதன்மையர். முனைவர் ராஜ்குமார், சமூகத்தில் தூய்மை, சுகாதாரம் மற்றும் மேம்பட்ட வாழ்வாதார முறைகளை ஊக்குவித்தல் போன்ற சமூக நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கு குறித்துப் பேசினார்.

Advertisement

தென்கரை பஞ்சாயத்துத் தலைவர் மகாலட்சுமி பிரசாந்த் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் சமூகப் பணிகளில் ஈடுபடவும், சமூகக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ளவும், படிக்கும்போதே தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், சமூக நல நடவடிக்கைகளில் பங்கேற்கவும் மாணவர்களை ஊக்குவித்தார்.

பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட திட்டம் பேரூர் தாலுகாவை, சார்ந்த ஏழு கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது. திட்ட அலுவலர்கள் முனைவர் சிவகுமார் மற்றும் முனைவர் தங்கேஸ்வரி ஆகியோரின் தலைமையில் வேளாண்மை மாணவர்கள் தென்கரை மற்றும் செல்லப்பகவுண்டன்புதூரையும், திட்ட அலுவலர்கள் முனைவர் கவிதா ஸ்ரீ மற்றும் முனைவர் பழனிசெல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் வேளாண்மைப் பொறியியல் மாணவர்கள் சென்னனூர் மற்றும் கிருஷ்ணபுரம்புதூரையும் தத்தெடுத்தனர்.

Advertisement

முனைவர் சிவகுமார் தலைமையில் தோட்டக்கலை மாணவர்கள் மத்திப்பாளையம் மற்றும் கரடிமடையையும், முனைவர் அமிர்தம் தலைமையில் உயிரித்தொழில்நுட்பம் மற்றும் வேளாண் வணிக மாணவர்கள் குப்பனூர் கிராமத்தையும் தத்தெடுத்தனர்.

இந்தக் குழுக்கள் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் ஏழு நாட்கள் தங்கி, இரத்த தானம், டெங்கு தடுப்பு, மது ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, உறுப்பு தானம் போன்ற சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மேலும், கிராமத் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் பங்கேற்பதுடன், பயிர் விளைச்சலையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க உதவும் உயர் தொழில்நுட்பங்களையும் செயல்விளக்கம் அளிப்பார்கள்.

இந்த ஏழு நாள் சிறப்பு முகாமை, பல்கலைக்கழகத்தின் முதன்மையர் (மாணவர் நலம்) முனைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல்காளை ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...