சவுரிபாளையத்தில் வழிப்பறி – தங்க மோதிரம், Google Pay மூலம் ரூ.22,100 பறிப்பு

கோவை : கோவையில் வாலிபரை ஹெல்மெட் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி, மிரட்டி தங்க மோதிரம் மற்றும் Google Pay மூலம் ரூ.22,100 பணத்தை பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

கோவை பீளமேடு, பி.கே.டி நகரைச் சேர்ந்தவர் அபிஜித் விஸ்வம் (30). இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2-ம் தேதி இரவு தனது நண்பர் ரமேஷை பைக்கில் சென்று வழியனுப்பிவிட்டு, அபிஜித் விஸ்வம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சவுரிபாளையம் சுப்பையகோனார் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே சென்றபோது, அங்கு வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் திடீரென ஹெல்மெட்டால் தாக்கி கீழே தள்ளியதுடன், பீர் பாட்டிலாலும் தாக்கியுள்ளனர்.

மேலும், கொலை செய்து விடுவதாக மிரட்டி அவரது தங்க மோதிரத்தை பறித்துள்ளனர். தொடர்ந்து அவரது செல்போனில் இருந்து Google Pay மூலம் ரூ.22,100-ஐ தங்களது செல்போனுக்கு மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அபிஜித் விஸ்வம் நேற்று சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில், பணம் மற்றும் நகையை பறித்தவர்கள் மிதிலேஷ், கிருத்திக் பாலாஜி மற்றும் கோவிந்த் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...