கோவை ACC சிமெண்ட் ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

கோவை: கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தை கண்டித்து அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

கோவை மாவட்டம் பாலக்காடு சாலை மதுக்கரை பகுதியில் பிரபல சிமெண்ட் நிறுவனமான ஏசிசி சிமெண்ட் நிறுவன ஆலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த நிறுவனத்தை அதானி குழுமத்தினர் வாங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் அப்பகுதியில் பெருமளவில் காற்று மாசு அடைந்து சுவாசக் கோளாறு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர். பல கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக போராடியும் தீர்வு கிடைக்காததால் இன்றும் பாலக்காடு பிரதான சாலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

காலையிலிருந்து அதிகளவு புழுதி வெளியேறி குடிநீர் மற்றும் வீடுகளிலும் அதிக அளவிலான சுகாதார கேடு ஏற்படுவதாகவும் பல்வேறு விதமான சுவாச நோய்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பலரிடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பெயரளவில் மட்டுமே ஆய்வு நடத்தி செல்வதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள் சோதனை நடத்துவதற்கு முன்பாகவே அது குறித்து ஆலை நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்துவிட்டு அதிகாரிகள் வருவதாகவும் கூறிய அவர்கள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Advertisement

அமைச்சர் விக்னேஷ் தேர்தலுக்கு முன்பு வரும் போது இப்பிரச்சனை பற்றி பேசியதாகவும் ஆனால் தற்போது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...